யுஏஇ.,யில் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

யுஏஇ வரலாற்றிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் குடிமக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துள்ளது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ம் ஆண்டு Nafis employment programme என்ற திட்டத்தை அதிபர் ஷேக் முகம்மது துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தனியார் கம்பெனிகளில் 70,000 அமீரக பாதுகாப்பான வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த திட்டத்திற்காக துணை அதிபரும், யுஏஇ பிரதமருமான ஷேக் முகம்மது24 பில்லியன் திஹ்ரானை ஒதுக்கினார். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, ஆதரவு அளித்ததால் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த மாதத்தின் துவக்கத்தில் யுஏஇ அமைச்சரவை அறிவித்துள்ள புதிய முடிவின் படி, தனியார் துறை கம்பெனிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள அமீரக விண்ணப்பதாரர்களுக்கு ஃபெடரல் அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் துறைகளில் வேலை பார்த்த அனுபவமும் ஃபெடரல் அரசு பணிக்கான கூடுதல் தகுதியாக சேர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உருவாக்கப்பட்டு வருவது நாட்டின் பொருளாதாரத்திற்கு துணையாக உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் அமீரக மக்களுக்காக புதியதாக கூடுதலாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதே லட்சியம் என ஷேக் முகம்மது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Nafis employment programme என்பது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சதவீதம் என்ற அடிப்படையில் 2026ம் ஆண்டிற்குள் அமீரக வேலைவாய்ப்பு திறன் குறைந்தபட்சம் 10 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என்பதாகும். இந்த இலக்கை அடைய தவறினால் ஒவ்வொரு கம்பெனியும் முதல் ஆறு மாதங்களில் 48,000 திஹ்ரான் அபராதமாக செலுத்த வேண்டும். அதாவது, ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 8000 திஹ்ரான் என்ற அடிப்படையில் செலுத்த வேண்டும். மாதாந்திர அபராத தொகை ஒவ்வொரு ஆண்டும் 1000 திஹ்ரான் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான யுஏஇ நாட்டினரை தங்களின் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

கம்பெனிகள் இவற்றை செய்துள்ளனவா என குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 2022ம் ஆண்டு மத்தியில் இருந்து இந்த ஆண்டு மே 16ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 1300க்கும் அதிகமான கம்பெனிகள் இந்த விதிகளை மீறி உள்நாட்டினருக்கு பதிலாக வெளிநாட்டினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது தெரிய வந்துள்ளது. அதே சமயம் 2021 செப்டம்பர் வரை தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 170 சதவீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

 

 

  • Anu

    அனு என்பது UAE Tamil Web-இன் ஆசிரியர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எடிட்டோரியல் அடையாளம். ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான செய்திகள், வேலைவாய்ப்புகள், சமூக நிகழ்வுகள், பயண தகவல்கள் மற்றும் பயனுள்ள வழிகாட்டி கட்டுரைகளை எளிமையான தமிழில் தொகுத்து வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். UAE மற்றும் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு நம்பகமான, விரைவான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவது UAE Tamil Web-இன் முக்கிய நோக்கமாகும்.

    Related Posts

    எல் நினோ 2026: துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கடுமையான வெப்பமும் கனமழையும் வருமா?

    2024 ஏப்ரல் மாதத்தை துபாயில் வாழ்ந்தவர்கள் எளிதில் மறந்துவிட முடியாது. வழக்கம்போல வேலைக்குச் செல்ல தயாரான பலர், சில மணி நேரங்களுக்குள் நகரம் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டிருப்பதை நேரில் பார்த்தனர். முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வாகனங்கள் பாதியில் நின்றுவிட்டன.…

    Read more

    100 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியுமா? அதற்காகவே புதிய அமைப்பை உருவாக்கிய துபாய்!

    உலகின் முதல் Longevity தலைநகராக மாறும் கனவில் துபாய் ஒரு காலத்தில் எண்ணெய், வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளால் உலக கவனத்தை ஈர்த்த துபாய், இன்று செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ புதுமைகள் போன்ற துறைகளில்…

    Read more

    You Missed

    எல் நினோ 2026: துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கடுமையான வெப்பமும் கனமழையும் வருமா?

    • June 14, 2026
    எல் நினோ 2026: துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கடுமையான வெப்பமும் கனமழையும் வருமா?

    100 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியுமா? அதற்காகவே புதிய அமைப்பை உருவாக்கிய துபாய்!

    • June 12, 2026
    100 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியுமா? அதற்காகவே புதிய அமைப்பை உருவாக்கிய துபாய்!

    D33: அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை உலகின் Top 3 நகரங்களில் ஒன்றாக மாற்றும் மாஸ்டர் பிளான்!

    • June 10, 2026
    D33: அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை உலகின் Top 3 நகரங்களில் ஒன்றாக மாற்றும் மாஸ்டர் பிளான்!

    துபாயின் புதிய அடையாளம்: AI செஃப் உருவாக்கும் மெனு… மனிதர்கள் சமைக்கும் ஹோட்டல்!

    • July 17, 2025

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!